Thursday, January 29, 2009

பயபுள்ள நல்லா இருக்கணும்...

ஆஹா... நாம எழுதினத கூட படிச்சுட்டு யாரோ comment அனுப்பி இருக்காங்களே.. என்னடா இது உலகத்தோட எட்டாவது அதிசயமா இருக்கு அப்படின்னு சந்தோசமா open பண்ணி பார்த்தா... நம்ம வைகை புயல் வடிவேலு சொல்லற மாதிரி 'நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்' ... பயபுள்ள திட்டி எழுதி இருக்கு..


அது சரி நம்ம என்ன வள்ளுவர் பேரனா.. ஏதோ திட்டி எழுதவாவது ஆள் இருக்கே அப்படின்னு மனச தேத்திக்கிட்டேன்.... வேற என்ன பண்ண.. நம்ம கவுண்டர் சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு.. 'Blog எழுத வந்துட்டா இதுலாம் சகஜமப்பா'..


இங்க பாருங்க பாசு.. நம்ம என்ன சரஸ்வதியின் சபதம் படத்துல வர்ற சிவாஜி கணேசனா.. சாமி வந்து நாக்குல எழுதன ஒடனே சும்மா பிச்சுகிட்டு பாட.. அதுவும் இல்லாம நமக்கு தெரிஞ்ச ஒரே சாமி நம்ம அரவிந்த் சாமி தான்.. பொறந்த குழந்தை கிட்ட சும்மா பாடு பாடுன்னா அது எப்படி பாசு பாடும்... கொஞ்சம் கொஞ்சமா தான் வரும்.. அது மாதிரி தான் பாசு நம்மளும்.. இப்ப தான ஆரம்பிச்சு இருக்கறோம்.. போக போக பாருங்க.. எப்படி பிச்சு உதற போறோம்னு..

எப்படி இருந்தாலும் முத முதலா comment அனுப்பி இருக்கீங்க.. உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி பாசு.. பயபுள்ள நல்லா இருக்கணும்..







Wednesday, January 28, 2009

நாங்களும் எழுதுவோம்ல.......

என்னடா இது... நம்ம பாட்டுக்கு ஒரு blog ஆரம்பிச்சுட்டோம். என்ன எழுதறது தெரியல அப்படின்னு night full ஆ யோசிச்சு பார்த்தேன். தூக்கம் கெட்டதுதான் மிச்சம். அப்படினா இதோட blog ல எழுதறத நிறுத்திடுவோம் னு நெனச்சேன். ஆனா இப்ப இருக்கற situation ல வீடு கூட இல்லாம இருந்திடலாம்.. ஒரு blog இல்லாம இருக்க முடியாது போல. ஒரு மனுசனக்கு சாப்பாடு, துணி, வீடு ரொம்ப அத்யாவசியமுனு சொல்வாங்க. ஆனா இப்ப அத விட blog தான் முக்கியம் னு தைரியமா எறங்கிட்டேன். வள்ளுவரே சொல்லிஇருக்காரே 'எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு' அப்படின்னு....

எதை பத்தி எழுதறது.. ஒன்னுமே புரியலயே னு இருந்தேன். அப்பதான் தோணுச்சுநம்ம தான் எவ்ளோ டப்பா படமா இருந்தாலும் தியேட்டர்ல பார்க்கறமே நம்மளே ஒரு கதை எழுதனா என்னனு ....

எதை பத்தி கதை எழுதறது... நம்மள பத்தி எழுதுவோமா.. ச்சே... நம்மள பத்தி எழுதனா நம்மளே படிக்க மாட்டோம்.. நம்ம இது வரைக்கும் பார்த்த படங்கள்ல இருந்து ஒரு பத்து படத்துல இருந்து உருவி ஒரு புது கதை எழுதுவோம்னு பார்த்தேன்... அப்படினா புது படத்துல இருந்து சுட்டா கண்டு பிடிச்சுருவாங்க... so பழைய படத்துல இருந்து சுடுவோம்னு முடிவு பண்ணினேன்..அப்ப தான் நம்ம ஞாபக சக்தி பத்தி தெரிஞ்சது. காலைல என்ன சாபிட்டோம் அப்படின்னு கை கழுவரதுக்குள்ள நமக்கு மறந்துடுது.. பழைய படம் எங்க ஞாபகம் வர போகுது..

ச்சே.. நம்ம முதல் முதலா கதை எழுதற blog இப்படி கதை இல்லாம நிக்குதே.. இதுக்கு தான் உலக சினிமா உலக இலக்கியம் எல்லாம் படிக்கனும்னு தோணுச்சு.. அது சரி.. நமக்கு தான் கழக கலகத்த பார்க்கவே நேரம் பத்த மாட்டேங்குது.. நம்ம எங்க இருந்து உலக இலக்கியம் படிக்கறது..

சரி பழைய படம் வேணாம்.. புது படத்துல இருந்தே கதைய சுடலாம்னு முடிவு பண்ணினேன்.. பொங்கலுக்கு தான் நம்ம படம் பார்த்தோமே நம்மளே நமக்கு பில்லி சூனியம் வச்ச மாதிரி.. அதுல இருந்து ஏதாவது சுடலாம்னு நெனச்சேன்.. கடைசில தான் தெரிஞ்சது.......... அட மக்கா இப்ப வர்ற படத்துல கதையே இருக்கறது இல்லையே.. இதுல நான் எங்க போயி கதைய சுட...


Tuesday, January 27, 2009

என் இனிய வலைப்பதிவர்களே,

வணக்கம். இதுவரை சும்மா blog blog ஆ படிச்சுட்டு இருந்த நான் எனக்காக ஒரு blog வேணாமா nu room போட்டு யோசிச்சு பார்த்தேன். அதோட விளைவா தான் இந்த blog. இனிமேல் time கிடைக்கறப்போ எழுதறேன். அப்படி time கிடைக்கலைனாலும் எழுதறேன்